ஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்


இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதைத் தொடர்ந்து அபாய ஒலி எழுந்ததை அடுத்து, டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை ஒன்றை இடைமறிக்கும் முயற்சிகளின்போது, ​​மத்திய இஸ்ரேலில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஏவுகணை கொத்துக் குண்டுத் தாக்குதல் ரக வெடிபொருட்களைக் கொண்டிருக்கக்கூடும் என்று ஹாரெட்ஸ் செய்தித்தாள் கூறியது.

மற்றொரு தாக்குதலில், தெற்கில் உள்ள அஷ்கெலோன் நகரில் ஏவுகணைச் சிதறல்கள் ஒரு கட்டிடத்தைச் சேதப்படுத்தியதாக இஸ்ரேல் ஹயோன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும், தெற்கு இஸ்ரேலில் உள்ள யாட் மொர்தெகாய் சமூகத்திலும் சிதறல்கள் விழுந்ததாகவும், ஆனால் அவை காயங்களுக்கோ அல்லது சொத்து சேதங்களுக்கோ வழிவகுக்கவில்லை என்றும் அது கூறியுள்ளது.

No comments